மும்பை: தொடக்கத்திலிருந்தே ஏற்ற இறக்கத்துடன் இருந்த பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 0.5% உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 410 புள்ளிகள் உயர்ந்து 81,597 புள்ளிகளானது. காலை வர்த்தகத்தில் 835 புள்ளி அதிகரித்து 1% உயர்வுடன் இருந்த சென்செக்ஸ் 410 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தன. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து விற்பனையாயின.