லாகூர்:மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 166 பேர் பலியாயினர். இந்த தாக்குதலுக்கு தீவிரவாதி களை தயார்படுத்திய லஷ்கர்- இ தொய்பா அமைப்பின் தலைவர்களில் முக்கியமானவர் ஹபிஸ் அப்துல் சலாம் புட்டாவி(77). இவர் தீவிரவாத செயல்களுக்கு நிதி திரட்டிய வழக்கில், 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஷேக்குபுரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த புட்டாவி (77) மாரடைப்பால் நேற்று முன்தினம் உயிரிழந்தார் என அவரது உதவியாளர் தெரிவித்தார்.