நறுக்கிய பரங்கிக்காய்,
கத்திரிக்காய்,
அவரை,
காராமணி,
மொச்சை,
வாழை,
முருங்கைக்காய் கலவை 2 கப்,
வேக வைத்த துவரம்பருப்பு கால் கப்,
சின்ன வெங்காயம் 15,
பூண்டு 8 பல்,
புளி 50 கிராம்,
தக்காளி 4,
மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்,
தனியாத்தூள் ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்,
கடுகு,
சீரகம்,
சோம்பு தலா கால் டீஸ்பூன்,
வெந்தயம் அரை டீஸ்பூன்.
கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு,
உப்பு தேவையான அளவு.
செய்முறை
சின்ன வெங்காயம், பூண்டை தோலுரித்து, நசுக்கிக் கொள்ளவும். புளியை ஊற வைத்து கரைத்து, வடிகட்டவும். பிறகு புளிக் கரைசலை கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும், தோல் உரித்த சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, நறுக்கிய காய்கறிக் கலவையைச் சேர்த்துக் கலக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து, காய் வேகும் வரை கொதிக்க விடவும்.
வெறும் கடாயில் கடுகு போட்டு பொரிந்ததும், சீரகம், சோம்பு, வெந்தயம் சேர்த்து வறுத்து, குழம்பில் சேர்க்கவும். வேக வைத்த துவரம்பருப்பை சேர்த்துக் கலந்து, கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.