Friday, June 13, 2025
Home செய்திகள்இந்தியா முல்லைப் பெரியாறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 4 வாரத்தில் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

முல்லைப் பெரியாறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 4 வாரத்தில் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

by Karthik Yash

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த், திபங்கர் தத்தா மற்றும் என்.கே.சிங் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சேகர் நாப்தே,உமாபதி மற்றும் சபரீஸ் சுப்ரமணியன் ஆகியோர்,” முல்லைப் பெரியாறு பராமரிப்பி பணிக்காக தமிழ்நாடு அரசு தரப்பில் நீண்ட காலமாக அனுமதி கேட்டு வருகிறோம். ஆனால் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், கேரளா அரசு அதனை மறுத்து வருகிறது. மரங்களை வெட்டுவதற்கு கேரளா அரசு முன்பு அனுமதி அளித்தது.

ஆனால் தற்போது ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் தான் அனுமதி தர வேண்டும் எனக்கூறி பராமரிப்பு பணிகளுக்கு இடையூறாக இருந்து வருகிறது. கோர வேண்டும் என்று கேரளா கூறுகிறது. அதற்கான விண்ணப்பத்தையும் ஒன்றிய அரசிடம், கேரளா வழங்கியுள்ளது. குறிப்பாக வல்லக்கடவு சாலை பராமரிப்பு பணியை கேரளா அரசு செய்யும் பட்சத்தில் அதற்கான செலவை தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும். அதேப்போன்று அணையில் இருக்கும் சிமண்ட் பணிகளை மேற்கொள்ள மேற்பார்வை குழு உத்தரவிட்டும் அதனை அமல்படுத்த கேரளா அரசு எங்களை அனுமதிப்பதில்லை என்று தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ” முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புக்கு மரங்களை வெட்ட அனுமதி வழங்குவதற்கு கேரளாவுக்கும், ஒன்றிய அரசுக்கும் கால நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் நினைக்கிறது. குறிப்பாக மராமத்து பணிகள் நடத்த ஏதுவாக வல்லக்கடவு சாலையை கேரளா அரசே ஏன் சீரமைக்க கூடாது?. மேலும் மராமத்து பணிகளை மேற்கொள்ள பணியாளர்கள் செல்ல ஏதுவாக இரண்டாவது படகு ஒன்றை தமிழ்நாடு அரசுக்கு, கேரளா அனுமதிக்க வேண்டும்.

குறிப்பாக இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது என்று கேட்டார். அப்போது அதற்கு பதிலளித்த ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி,\\” முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் கோரிக்கை மற்றும் மனுவை பரிசீலித்து வருகிறோம். விரைவில் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்.\\”முல்லைப் பெரியாறு அணையை பராமரிப்பதற்கு ஏதுவாக, மரங்களை வெட்டுவது தொடர்பாக ஒன்றிய அரசு, சுற்றுச்சூழல் அனுமதியை நான்கு வாரத்தில் வழங்க வேண்டும்.

வல்லக்கடவு சாலை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு உரிய பொருட்களை கொண்டு நான்கு வாரத்தில் கேரளா அரசே சீரமைக்க வேண்டும். அந்த பணி நடக்கும் போது தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இருமாநில அதிகாரிகளும் உடனிருக்க வேண்டும். குறிப்பாக மராமத்து பணிகளை மேற்கொள்வதற்கு பணியாளர்கள் செல்ல ஏதுவாக இரண்டாவது படகு ஒன்றை தமிழ்நாடு அரசுக்கு கேரளா அனுமதிக்க வேண்டும். இதில் அணை குறித்து மீதமுள்ள பிரச்சனைகள் குறித்து முடிவு செய்ய முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வை குழு உடனடியாக கூடி நான்கு வாரத்தில் முடிவுகளை மேற்கொண்டு அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi