தூத்துக்குடி: தாய், மகள் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். மேலநம்பிபுரம் கிராமத்தில் தாய், மகள் கொலை வழக்கில் முனீஸ்வரன்
என்ற நபரை போலீசார் தேடி வந்தனர். ரகசிய தகவலை அடுத்து முனீஸ்வரன் சுற்றிவளைத்து போலீசார் கைதுசெய்ய முயன்றனர். போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றதால் முனீஸ்வரனின் காலில் துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த முனீஸ்வரன், தாக்குதலில்
காயமடைந்த எஸ்.ஐ. முத்துராஜ் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார்.
தாய், மகள் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்
0