Friday, July 18, 2025
Home செய்திகள்Banner News மொஹரம் பண்டிகையை முன்னிட்டு வரும் 7ம் தேதி விடுமுறை என பரவும் செய்தி வதந்தி: தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம்

மொஹரம் பண்டிகையை முன்னிட்டு வரும் 7ம் தேதி விடுமுறை என பரவும் செய்தி வதந்தி: தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம்

by Suresh

சென்னை: மொஹரம் பண்டிகை முன்னிட்டு ஜூலை 7 அரசு விடுமுறை என்று சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் வதந்தி என தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

அரசு தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளதாவது; “மொஹரமை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

இது தவறான தகவலாகும்.

“கடந்த 26-06-2025 அன்று மொஹரம் மாத பிறை காயல்பட்டினத்தில் காணப்பட்டது. ஆகையால் 27-06-2025 தேதி அன்று மொஹரம் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. எனவே யொமே ஷஹாதத் ஞாயிற்றுக்கிழமை 06-07-2025 ஆகும்.” என்று தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை அந்த நாள் அறிவிக்கப்பட்டுள்ளதால் 07-07-2025 திங்கட்கிழமை அரசு விடுமுறை இல்லை.

தவறான தகவலை பரப்பாதீர்” என தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi