Friday, July 18, 2025
Home செய்திகள்Showinpage உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்களின் அமெரிக்க அரசுமுறைப் பயணம் மற்றும் கலந்துரையாடல்

உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்களின் அமெரிக்க அரசுமுறைப் பயணம் மற்றும் கலந்துரையாடல்

by Arun Kumar


வாஷிங்டன்: வேளாண்மை – உழவர் நலத்துறை வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்களின் அமெரிக்க அரசுமுறைப் பயணம் மற்றும் கலந்துரையாடினார்.

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள், 23.05.2025 அன்று விஸ்கான்சின் பல்கலைக்கழகச் செயலாளர் ரெண்டி ரொமன்ஸ்க்கி, . ஷாலா வெர்னர், பயிர் பாதுகாப்பு மேலாளர், பயிர் பாதுகாப்பு பணியகம் (Bureau of Plant Industry), ஜுலி லாஷா, நிர்வாக இயக்குநர் விஸ்கான்சின் மாகாண வேளாண்மைத்துறை மற்றும் திருடிராய் ஸ்பிரேக்ஸ் இயக்குநர். உணவு பாதுகாப்பு துறை ஆகியோருடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வின் போது, திடீரென பரவும் பூச்சிகள் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். மேலும், முன்னறிவிப்பு செய்வது பற்றிய நவீன தொழில்நுட்பங்கள், பாதுகாப்பான பூச்சி மற்றும் நோய் தாக்குதல் மேலாண்மை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தால் அமைக்கப்பட்டுள்ள மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் உலக அரங்கில், தமிழக விவசாயிகளின் விளைப்பொருட்களை சந்தைப்படுத்துதல் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

23.06.2025 அன்று பிற்பகல் விஸ்கான்சின் மாகாணத்தில் அதிகளவில் உருளைக்கிழங்கு, மற்றும் வெங்காயம் உற்பத்தி செய்யும் மிகப்பெரிய வேளாண் பண்ணைக்கு சென்று, அங்கு விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கு, சிவப்பு உருளைக்கிழங்கு,, கேரட், புதினா ஆகிய பயிர்களின் சாகுபடி தொழில்நுட்ப முறைகள், நவீன இயந்திரங்களின் பயன்பாடு, செயற்கை நுண்ணறிவு மூலம் பயிர் பாதுகாப்பு மேற்கொள்ளுதல், நீர் மேலாண்மை மற்றும் மண்ணின் தரம் ஆகியவை பற்றி விரிவாக கேட்டறிந்தார்.

மேலும், விஸ்கான்சின் மாகாணத்தில் அதிக மகசூல் தரக்கூடிய கேரட் விதைகளை தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்து தமிழக விவசாயிகள் அதிக மகசூல் பெற்று அதன் மூலம் வருமானத்தை பெருக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ள விரிவாக விவாதித்தார்.

பின்னர், 24.06.2025 அன்று வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள கான்செஸ் மாநில வேளாண் பல்கலைக்கழகத்தில் கான்சாஸ் மாகாண வேளாண்துறை செயலாளர், மாகாணத்தின் ஏற்றுமதி இயக்குநர், பல்கலைக்கழகத்தின் வேளாண்துறை பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து பூச்சி நோய் தாக்குதல் மேலாண்மை, வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டுதல், செயற்கை நுண்ணறிவு மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் முறைகள், ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் இங்கு கடைபிடிக்கப்படும் சிறந்த நடைமுறைகள் குறித்து கலந்துரையாடினார்கள்.  இந்நிகழ்வுகளின் போது தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பொ.குமாரவேல் பாண்டியன், அவர்கள் உடன் இருந்தார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi