சென்னை: அமைச்சர் கே.என்.நேரு மீதான நில அபகரிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. திருச்சி நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட்டில் அமைச்சர் கே.என்.நேரு வழக்கு தொடர்ந்தார். புகார்தாரர் தரப்பில் சமரச மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டது.