Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மெக்சிகோவில் அதிகாலையில் வெடித்த எரிமலை: எரிமலை வெடித்தபோது பதிவான அரிய காட்சி வைரல்

மெக்சிகோ: மெக்சிகோவில் பாபோகா டேபிட்டல் எரிமலை அதிகாலையில் வெடித்தது. இத வெடிப்பில் எரிமலை பிளம்பு வானில் எழுந்த அதே நேரத்தில் அதன் அருகில் ஒளிரும் கடந்து சென்ற காட்சி பதிவாகியுள்ளது. அது விண்கலம் இருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. எரிமலை வெடித்ததால் சாம்பல் திட்டுகள் மற்றும் வாயு தொடர்ச்சியாக வெளியேறி வருகின்றனர்.

இது எரிமலை சாம்பல் ஆலோசனை மையம் மற்றும் மெக்சிகோவில் பேரிடர் தடுப்புகான தேசிய மையம் ஆகியவற்றால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அக்டோபர் 14ஆம் தேதியான இன்று மெக்சிகோவில் பேரிடர் தடுப்புக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாபோகா டேபிட்டல் எரிமலை தொடர்ச்சியாக வெடிக்கும் கட்டத்தில் எட்டியுள்ளது என்றும் ஆனால் அது குறித்து எந்த பேரழிவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது குறித்து அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பாகவே பொதுமக்களுக்கும் அங்கு குடியிருப்பவர்களுக்கும் இந்த எரிமலை வெடிப்பு குறித்தும், அதுனால் தினமும் வெளியாகப்போகும் புகை மற்றும் சாம்பல் விழும் அபாயம் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதிக்கு இரண்டு கட்ட எச்சரிக்கையாக மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

அது மட்டும் இல்லாமல் அந்த பள்ளத்திற்கு 12 கிலோ மீட்டருக்கு மேல் நெருங்குவதை தவிர்க்கவும் என அங்கு இருக்கும் குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே பாபோகா டேபிட்டல் எரிமலை மெக்சிகோ நகரத்தில் தென்கிழக்கே அமைந்துள்ளது. இப்பகுதியில் வசிக்கும் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த எரிமலை வெடிப்பால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக எரிமலை சாம்பல் மற்றும் வெடிப்பு காலங்களில் போது சுகாதாரமற்ற கற்றை சுவாசிப்பதினால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் இந்த வெடிப்பில் எரிமலை பிழம்பு வானில் எழுந்த அதே நேரத்தில் அதன் அருகில் ஒளிரும் பொருள் ஒன்று கடந்து சென்ற அரிய காட்சி பதிவாகியுள்ளது. அது விண்களாக இருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த அறிய காட்சியை தேசி பேரிடர் தடுப்பு மையம் வெளியிட்டுள்ளது. இது போலவே கடந்த 1990களில் இந்த எரிமலை கிட்டத்தட்ட குறைந்த முதல் மிதமான வெடிப்பு செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. அப்போதும் சாம்பல் விழுதல், புகை எழுதல் போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன.

அந்த நேரங்களில் பாதுகாப்புக்காக அதிகாரிகள் விமான பயணத்திற்கு தடை விதித்து மற்றும் பல முன் எச்சரிக்கைகள் முடுக்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து வெளியெடுப்பட்டுள்ள அறிக்கைகளில் பெரிய வெளியேற்றுங்கள் அல்லது பேரழிவுகளை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை ஆனால் நிலைமை அசாதாரணமாக மாறும் தன்மையுடன் உள்ளது என்றும் உள்ளூர் அதிகாரிகள் தீவிரமாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.