மேட்டூர்: தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 31,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை விநாடிக்கு 18,615 அடியாக சரிந்தது. அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 22,300 கனஅடியும், உபரிநீர் போக்கி வழியாக விநாடிக்கு 1700 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கனஅடியும் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 4 நாட்களுக்கு பிறகு, 120 அடியிலிருந்து 119.91 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 93.15 டிஎம்சியாக உள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 119.91 அடியாக சரிவு
0