மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 2வது நாளாக நேற்றும், 4,000 கனஅடியாக நீடிக்கிறது. இதனால் அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதேசமயம் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 2,832 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 2,034 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. திறப்பை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால், நேற்று முன்தினம் 107.55 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று காலை 107.59 அடியாக சற்று உயர்ந்தது. நீர் இருப்பு 75.02 டிஎம்சியாக உள்ளது.
மேட்டூர் அணையில் 107.59 அடியாக நீர்மட்டம் உயர்வு
0