சென்னை: மெட்ரோ ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை என விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிகாக நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை, இன்று மற்றும் நாளை இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு 8 மணி முதல் 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது