அவனியாபுரம்: அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று மதுரை வந்தார். விமானநிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் மேகதாது அணை கட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கூறியுள்ளார். ஆனால் தமிழக அரசின் அனுமதி பெறாமல் மேகதாது அணையை அவர்களால் கட்ட முடியாது’’ என்றார்.
மேகதாது அணை கட்ட தமிழக அனுமதி தேவை: ஓ.பன்னீர்செல்வம் கருத்து
previous post