சென்னை: மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக் கோரி மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்யக் கோரி ஏப்.26ம் தேதி சென்னை, திருச்சி, கோவையில் மதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறது. மேலும் மதிமுக முதன்மை செயலாளர் பொறுப்பில் துரை வைகோ தொடர வேண்டும் எனவும் துரை வைகோவின் விலகல் கடிதத்தை ஏற்க கூடாது எனவும் நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
0