இம்பால்: மணிப்பூர் கலவரம் தொடர்பாக அசாம், மணிப்பூர் மாநில முதல்வர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கை சந்தித்து அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆலோசித்தார். கலவரம் தொடர்பான வழக்கை சிபிஐயும் சிறப்பு புலனாய்வு குழுவும் விசாரிக்கும் நிலையில் சந்திப்பு நடைபெற்றது. பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக மைத்தேயி மற்றும் குகி இன மக்களிடையே கலவரம் ஏற்பட்டுள்ளது.