இம்பால்: மணிப்பூரின் தவுபால் மற்றும் இம்பால் மேற்கு மாவட்டங்களில் பாதுகாப்பு படையினரின் இருவேறு நடவடிக்கைகளில் தடை செய்யப்பட்ட அமைப்புக்களை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தவுபாலின் யூனிங்காங்கில் தடை செய்யப்பட்ட அமைப்பான காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு தீவிர உறுப்பினர்கள் கைது நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிமருந்துகள், ரொக்கம் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் மற்றொரு நடவடிக்கையில் இம்பாலின் மேற்கில் உள்ள லாங்கோலில் தடை செய்யப்பட்ட காங்லெய் யாவோல் கன்னா லூப் அமைப்பை சேர்ந்த ஒருவர் கைதானார்.


