டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த ஆளுநர் தலைமையில் ஒன்றிய அரசு குழுவை அமைத்தது. ஆளுநர் தலைமையிலான குழுவில் முதல்வர், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பிற கட்சிகளின் பிரதிநிதிகள் இடம்பெறுவர். முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரும் இடம்பெறுவர் என உள்துறை தெரிவித்துள்ளது.