மதுரை: மதுரை கடன் வசூல் தீர்ப்பாயத்துக்கு இதுவரை தலைமை அதிகாரி நியமிக்கப்படவில்லை என ஐகோர்ட் கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டு இதுவரை அதிகாரியை நியமிக்கவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்தது. மதுரை கடன் வசூல் தீர்ப்பாயத்தில் உள்ள நிலுவை மனுக்களை கோவை தீர்ப்பாயத்துக்கு மாற்றி விசாரிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.