மதுரை: மதுரை மண்டல முன்னாள் பாஸ்போர்ட் உதவி அதிகாரியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிபிஐ கோர்ட் விதித்த தண்டனையை ரத்து செய்யக் கோரி மனு அளிக்கப்பட்டது. மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது; ஆவண, ஆதாரங்கள் உள்ளன என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிபிஐ தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, சிபிஐ கோர்ட்டின் உத்தரவில் தலையிட வேண்டியதில்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.