மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஷெஹோர் எனும் கிராமத்தில் 2.5 வயது குழந்தை ஒன்று 200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. அந்தக் குழந்தையை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. ஆழ்துளை கிணற்றுக்குள் கேமராவும் செலுத்தப்பட்டு குழந்தை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மீட்புப் பணிகள் நடைபெறும் இடத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.