சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது மாதவரம் சுதர்சனம்(திமுக): ஹைடெக் சிட்டியை மாதவரத்திற்கு கொண்டுவர வேண்டும்.
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்: ஹைட்டெக் சிட்டி சென்னை, கோவை, ஓசூரில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நூறு ஏக்கருக்கு மேல் உள்ள நிலங்களை கண்டறிந்து ஹைடெக் சிட்டி அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஓசூரில் 500 ஏக்கரும், கோவையில் 250 ஏக்கரும், மாதவரம் பகுதியில் உள்ள மெட்ரோ ரயிலுக்காக ஒதுக்கப்பட்ட காலி இடங்களை பரிசீலித்து வருகிறோம். அந்த இடம் கிடைத்தால் மாதவரத்தில் ஹைடெக் சிட்டி உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.