ஆளி விதை – 1 கப்
வெல்லம் – ½ கப்
தண்ணீர் – ¼ கப்
ஏலக்காய் பொடி – ¼ டீஸ்பூன்(விரும்பினால்)
செய்முறை
ஒரு கடாயில் ஆளி விதைகளை சேர்த்து லேசாக மணம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். அதிக நேரம் வறுக்க வேண்டிய அவசியம் இல்லை. இவை நன்கு ஆறியதும் ஏலக்காய் சேர்த்து பொடித்துக் கொள்ளவும். இப்போது அதே கடாயில் 1/4 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். இதனுடன் அரை கப் சர்க்கரை சேர்த்து பாகு தயாரித்துக் கொள்ளவும்.
ஒரு கம்பி பதம் வந்த பிறகு ஆளி விதை பொடியை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
இவை இரண்டும் ஒன்று திரண்டு கடாயில் ஒட்டாமல் வரும் பதம் வந்த பிறகு அடுப்பை அணைக்கவும். இதனை நெய் தடவிய ஒரு தட்டில் பரப்பி வைக்கவும். உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் கட் செய்து பரிமாறலாம். ஆரோக்கியமான சிற்றுண்டியை விரும்புபவர்கள் இந்த ஆளி விதை பர்பியை நிச்சயம் முயற்சி செய்து பாருங்கள்