Thursday, April 25, 2024
Home » விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சபாநாயகர் அப்பாவு உட்பட 7 பேருக்கு 7 விருதுகள் அறிவிப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சபாநாயகர் அப்பாவு உட்பட 7 பேருக்கு 7 விருதுகள் அறிவிப்பு

by Arun Kumar

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சபாநாயகர் அப்பாவு உட்பட 7 பேருக்கு 7 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகளுக்கு ஆண்டுதோறும் இந்த விருதுகள் விசிக சார்பில் கொடுக்கப்படுகின்றன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.

கடந்த ஆண்டு முதல் கூடுதலாக ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்குகிறோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொகிறோம். முத்தமிழறிஞர் முனைவர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், மேனாள் கர்நாடக முதல்வர் சித்தாரமையா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்ட சான்றோர் பலருக்கு இதுவரை விசிக-விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வரிசையில் 2023 ஆம் ஆண்டுக்கான விசிக-விருதுகள் பெறும் சான்றோரின் பட்டியலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம். இந்த ஆண்டுக்கான “அம்பேத்கர் சுடர்” விருதினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா அவர்களுக்கும், “பெரியார் ஒளி” விருதினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் து.ராஜா அவர்களுக்கும் வழங்குவதில் பெருமைப்படுகிறோம்.

சிபிஐ. (எம்.எல்) பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாசார்யாவுக்கு அம்பேத்கார் சுடர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலர் பெரியார் ஒளி விருது விசிக அறிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் அப்பாவுக்கு காமராசர் கதிர்விருது வழங்கப்பட உள்ளது. டெல்லி முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபால் கவுதமுக்கு அயோத்திதாசர் ஆதவன் விருது வழங்கப்பட உள்ளது. மார்க்ஸ் மாமணி விருது கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர்ற்கு வழங்கப்பட உள்ளது. முனைவர் மோகன் கோபால், மேனாள் துணைவேந்தர்க்கு காயிதேமில்லத் பிறை விருது வழங்கப்பட உள்ளது. செம்மொழி ஞாயிறு என்று விருதினை தாயம்மாள் அறவாணன்க்கு வழங்கப்பட உள்ளது. விசிக விருதுகள் வழங்கும் விழா மே 28, ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியளவில் சென்னையில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று விடுதலை சிறுத்தை கட்சி தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

15 − thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi