தேவையானவை
பருப்புக் கீரை -1 கட்டு
மிளகு சீரகம் – 1 தேக்கரண்டி
பூண்டு – 10 பல்
இஞ்சி – 1 சிறு துண்டு
வெங்காயம் – 1
தக்காளி – 2
கொத்துமல்லி, புதினா – ஒரு கைப்பிடி அளவு
உப்பு, எண்ணெய், மஞ்சள் தூள் – தேவைக்கேற்ப.
செய்முறை:
கீரையை சுத்தம் செய்து அலசி, மிளகு, சீரகம், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு, இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பிறகு கீரைச் சாற்றையும் சேர்த்து, தேவைக்கேற்ப நீர் சேர்த்துக் கொதிக்கவைத்தபிறகு கொத்துமல்லி மற்றும் புதினாவை நறுக்கி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.