சென்னை: குத்தகையில் உள்ள அரசு சொத்துகளின் வாடகை பாக்கியை வசூலிக்க தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. வாடகை பாக்கியை வசூலிக்க தவறும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒசூரில் சேதமடைந்த வணிக வளாகத்தை புதுப்பிக்க கடையை காலி செய்ய அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது. நோட்டீஸை எதிர்த்து அஷ்வக் அகமது, பவன்குமார் ஜெயின் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.