தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

முகம் பொலிவு பெற வழிகள்..!

நன்றி குங்குமம் தோழி

பிரகாசமான முகத்தைப் பெற பல பெண்கள் விரும்புகின்றனர். நிலா போல் தங்களின் முகமும் ஜொலிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதற்கு சில எளிய வழிகளை கடைபிடிக்கலாம்.

*நாட்டுக் கற்றாைழயின் ஜெல்லி பகுதியுடன் கஸ்தூரி மஞ்சள், பாசிப்பருப்பு மாவு ஆகியவற்றை சேர்த்து குழைத்து அதை முகம், கழுத்துப் பகுதிகளில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாகும்.

*அதிமதுர சக்கையுடன் சிறிதளவு குங்குமப் பூ பால் விட்டு நன்றாக அரைத்த கலவையை முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால், முகத்தில் உள்ள கருமை நிறம் மாறி பளபளப்பு கிடைக்கும்.

*பப்பாளி, வாழைப்பழம் இரண்டையும் சம அளவு எடுத்து, தேன் கலந்து பேஸ்ட் பதத்திற்கு பிசைந்து இதை சருமத்தில் பூசி சில நிமிடங்கள் கழித்து கழுவ ஃப்ரஷ் லுக் கிடைக்கும்.

*கோதுமை மாவுடன் பாலாடை, பாதாம் பருப்பு இவற்றை நன்றாக நீர் விட்டு அரைத்து இரண்டு துளிகள் விளக்கெண்ணெய் சேர்த்து குழைத்து இதை முகத்தில் பூசி ஒரு மணி நேரம் கழித்து கழுவினால் முகம் பொலிவுடன் இருக்கும்.

*ஆப்பிள் பேஸ்டை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளப்பு தன்மை அடையும். ஆப்பிள் நீரை அரை டம்ளர் குளிக்கும் நீருடன் கலந்து குளித்தால் சருமம்

மென்மையாகும்.

*அவரை இலை சாற்றுடன் அன்னாசிப் பழ சாற்றை கலந்து முகத்தில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து முகம் கழுவினால், முகம் பளிச்சென்று இருக்கும்.

தொகுப்பு: வாசுகி, சென்னை.

Related News