தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வீட்டில் செய்யும் எளிய வைத்தியம்!

நன்றி குங்குமம் தோழி

* காய்ந்த திராட்சை பழத்தினை பசும்பாலில் ஊற வைத்து ½ மணி நேரம் கழித்து சாறை வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுத்தால் மலச்சிக்கல் தீரும்.

* மாங்கொட்டைப் பருப்பை உலர்த்தி, தூள் செய்து தேன் சேர்த்து சாப்பிட கொடுத்தால் வயிற்றில் உள்ள குடல் பூச்சி வெளியேறும்.

* துளசி இலை, அதிமதுரம் சம அளவு எடுத்து, இரண்டையும் மை போல அரைத்து, தாயின் மார்பு காம்புகளில் தடவிய பிறகு குழந்தையை பால் குடிக்க வைத்தால், குழந்தை நன்றாக விரும்பி பால் குடிக்கும்.

* நெல்லிக்காய் சாறு பிழிந்து குழந்தைகளுக்கு உள்ளுக்குள் கொடுத்துவர கண் சூடு உடனே குணமாகும்.

* அம்மான் பச்சரிசி, சுண்டைக்காய் அளவு கொடுத்து வர வயிற்றுப்புண் ஆறும். பொன்னாரை விதையை பசும்பாலுடன் மைய அரைத்தும் கொடுக்கலாம்.

* பூண்டுடன் ஓமம் பொடி செய்து கஷாயம் வைத்து குழந்தைகளுக்குக் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம் குணமாகும்.

* செம்பருத்திப் பூவை உலர்த்தி, பொடியாக்கி அதைக் கற்கண்டு தூளுடன் சேர்த்து தினசரி பாலில் கலக்கி வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுத்தால் உடல் பலம் பெரும்.

* வசம்பு இலை, மஞ்சள் சேர்த்து அரைத்து குழந்தைகளுக்கு தேய்த்துக் குளிப்பாட்டி வர குழந்தைகளுக்கு எந்த நோயும் அண்டாது.

* ஓமம், வசம்பு, மஞ்சள், இந்துப்பு, அதிமதுரம், சீரகம், திப்பிலி, சுக்கு சமஅளவு எடுத்து தூள் செய்து, தினசரி ஒரு சிட்டிகை பசும் நெய்யில் கலந்து காலையில் கொடுத்து வந்தால் குழந்தைகள் கெட்டிக்காரக் குழந்தைகளாக மாறி விடுவார்கள்.

*சுக்கை வெந்நீரில் நனைத்து கல்லில் உறைத்து 2 வேளை நெற்றியில் பற்று போட்டால் மூக்கடைப்பு, தலைபாரம் நீங்கும்.

தொகுப்பு: ஆர்.உமா, ஈரோடு.

Related News