தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

* பூரி மாவில் தண்ணீருக்கு பதில் பால் சேர்த்து ஊறவைத்தால் சுவையாக இருக்கும்.

* உப்பு, மஞ்சள், எலுமிச்சை சாறு, வெள்ளம் சேர்த்து 30நிமிடம் ஊறவைத்தால் பாகற்காய் கசக்காது.

* வடை எண்ணெய் உறியாமல் இருக்க வெந்த உருளைக்கிழங்கு மசியலை சேர்க்கவும். ம.வசந்தி, திண்டிவனம்.

* துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன் வரமிளகாய், பூண்டு, கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால் பொடி மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்!!!

* தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அரைத்து ஊற்றவும் குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்!!!

* உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்க வேண்டும்.இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல பதத்துடன் இருக்கும்!

* தோசைக்கு மாவு ஆட்டும்போது ஒரு கைப்பிடி ரவை சேர்த்து அரைத்தால் தோசை வார்க்கும்போது நன்கு சிவந்து மொறுமொறுவென வரும். சாப்பிடவும் சுவையாக இருக்கும். நாகஜோதி கிருஷ்ணன், சென்னை.

*மெதுவடை மொறு மொறுவென்று இருக்க, உளுத்தம் பருப்புடன் கொஞ்சம் பச்சரிசி சேர்த்து ஊற வைத்து அரைத்தால் நன்றாக இருக்கும்.

*கீரை சமைக்கும்போது சிறிதளவு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் கீரையின் நிறம் மாறாது.

*சாதம் வடிக்கும் போது குழைந்து விட்டால் உடனே சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்தால் குழையாமல் இருக்கும்.

*கேழ்வரகை ஊறவைத்து அரைத்து பால் எடுத்து அல்வா போன்று செய்யலாம். அதிக ருசியும், ஆரோக்கியமும் இருக்கும்.எம்.ஏ.நிவேதா, திருச்சி.

*கடலைப் பருப்பை சில மணி நேரங்கள் ஊறவைத்து, நீரை வடித்து விட்டு, நிழலில் காயவைத்து, காயும் எண்ணெயில் பொரித்து, உப்பு, காரப்பொடி தூவினால் சுவையான, சத்தான நொறுக்கு தீனி தயார்.

*வறுவல்களில் மிளகாய் தூளுக்கு பதில் மிளகுப் பொடியோ, பருப்பு பொடியோ தூவலாம். சுவை கூடுவதுடன் உடம்புக்கும் நல்லது.

* புளியோதரைக்கு சாதம் செய்யும் போது 2, 3 ஸ்பூன் நல்லெண்ணெய் கலந்தால் சாதம் உதிர் உதிராக வரும்.

* துவையல்களில் புளிக்கு பதிலாக மாங்காய் துருவல், தக்காளி சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும். உடம்புக்கும் நல்லது- எஸ்.ராஜம், ஸ்ரீ ரங்கம்.

* பாதுஷாவுக்கு பிசைந்த மாவு மீதி இருந்தால், அதில் பச்சை மிளகாய், வெங்காயம் இவற்றை அரைத்து கலந்து உப்பு சேர்த்து பிசைந்து விருப்பமான வடிவங்களில் தட்டி பொரித்தெடுத்தால் உப்பு பிஸ்கெட் தயார்.

* பிசைந்த சப்பாத்தி மாவு மீதம் இருந்தால் மாவின் மேல் சிறிது எண்ணெய் தடவி, காற்றுபுகாத டப்பாவில் வைத்து இறுக மூடி வைத்து விட்டால் 3, 4 நாட்கள் புதிதாக, வறண்டு போகாமல் இருக்கும்.

* கீரைகள், காய்கறிகளை கிரைண்டரில் குழவியை எடுத்து விட்டு அதில் வைத்தால் வாடாமல், வதங்காமல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

* சுண்டைக்காய், மணத்தக்காளி வற்றல்களை கைவசம் வைத்திருந்தால் காய்கறிகள் இல்லாதபோது பயன்படுத்தலாம். உடம்புக்கும் நல்லது. ஆர்.பத்மப்ரியா, திருச்சி.

* இரண்டு கெட்டி மாங்காயை தோலோடு குக்கரில் வைத்து 2 விசில் விட்டு வேகவைத்து, ஆறியதும் தோலுரித்து கைகளால் நன்றாக மசிக்கவும். பின் 4 கப் குளிர்ந்த நீர், கால் கப் சர்க்கரை, 1 ஸ்பூன் கருப்பு உப்பு,ஏலக்காய் தூள், சாட் மசாலா இரண்டும் தலா கால் ஸ்பூன் சேர்த்து நன்றாகக் கலந்து பருக உடலுக்கு மிகவும் நல்லது.

* உங்கள் வீட்டு டீ மணக்க ஒரு யோசனை. டீத்தூளை தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து, இஞ்சி, ஏலக்காய் போட்டுக் கொதிக்க வைக்கவும். டீ மணம் ஊரையே கூட்டி விடும். அளவான பால், சர்க்கரை சேர்த்துக் குடித்தால் சாப்பாடே தேவையிருக்காது.

* சாம்பார், ரசம் இவை மீதி இருந்தால் அவலை களைந்து அதில் ஊற்றிக் கலந்து வைக்கவும். ஊறிய பின் வெங்காயம், பச்சைமிளகாய் தாளித்து, அவலை கொட்டிக் கிளறினால் பிஸிபேலா மாதிரி சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும்.

தொகுப்பு: அபர்ணா சுப்ரமணியம், சென்னை.

 

Related News