தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தலை முடி பராமரிப்பு! வாசகர் பகுதி

Advertisement

நன்றி குங்குமம் தோழி

* எண்ணெய் தன்மையுள்ள தலை முடியை கொண்டவர் குளிக்கின்ற நீரில் ஒரு ஸ்பூன் வினிகரோ, எலுமிச்சை சாரோ கலந்து குளிக்க வேண்டும். அப்படி செய்து வந்தால் எண்ணெய் தன்மை தலைமுடியில் குறைந்துவிடும்.

* வாரத்தில் ஒருமுறை கட்டித் தயிரை தலையில் அழுத்தி தேய்த்தப் பின் இளஞ்சூடு உள்ள தண்ணீரில் தலை கழுவுவது எந்த வித தலை முடிக்கும் நல்லதாகும். தலை முடிக்கு நல்ல கறுப்பு நிறம் ஏற்படவும், எண்ணெய் தன்மையை கட்டுப்படுத்துவதற்கும் தயிர் உதவியாக இருக்கும்.

* எலுமிச்சைச் சாறு தலைப்பொடுகைப் போக்குவதற்கு மிகச் சிறந்த மருந்தாகும். ஒரு எலுமிச்சம் பழத்தின் சாரை இரண்டு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் கலந்து, தலையில் நன்கு அழுத்தி தேய்த்து, இரண்டு மணி நேரம் கழித்து இளஞ்சூடான தண்ணீரில் கழுவி விட வேண்டும். வாரத்தில் இருமுறை இவ்வாறு செய்தால் பொடுகு சுத்தமாக ஒழிந்து போகும்.

* தலைமுடி வறண்டதாக இருந்தால் குளிக்கும் முன்பு ஒரு முட்டையை நன்றாக அடித்தெடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் தேனும், ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயும் சேர்த்து தலை சருமத்தில் அழுத்தித் தேய்க்க வேண்டும். வாரத்தில் இருமுறை இவ்வாறு செய்தால் தலைமுடி செழுமையாகவும், அழகாகவும் இருக்கும்.

* ஒரு கப் தேங்காய்ப் பால், இரண்டு டீஸ்பூன் அரைத்த வெந்தயம் இவை இரண்டையும் கலந்து தலையில் தேய்த்து, பத்து நிமிடத்திற்கு பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இவ்வாறு தினமும் செய்தால் முடி கருகருவென வளரும். இளநரை வராது.

* தலைக்கு குளித்தவுடன் சாம்பிராணி புகையை தலையில் நன்கு காட்டினால் பேன் தொல்லை ஒழிந்து போகும்.

* நம் உடம்பில் இரும்புச் சத்து குறைந்தால் முடி உதிர ஆரம்பிக்கும். அதனால் அதிகம் கீரை சாப்பிட வேண்டும். இரும்புச் சத்துள்ள மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி அளவுடன் பயன்படுத்தலாம்.

தொகுப்பு: டி.லதா, நீலகிரி.

Advertisement