Wednesday, July 9, 2025
Home செய்திகள்Showinpage விமான விபத்தில் உயிரிழந்த குகி, மைதேயி பணி பெண்கள்; மணிப்பூரில் இன பாகுபாடு இன்றி மக்கள் ஒன்று சேர்ந்து இரங்கல்

விமான விபத்தில் உயிரிழந்த குகி, மைதேயி பணி பெண்கள்; மணிப்பூரில் இன பாகுபாடு இன்றி மக்கள் ஒன்று சேர்ந்து இரங்கல்

by Francis

கொல்கத்தா: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் 10 பணிப்​பெண்​கள் இருந்​துள்​ளனர். அவர்​களில் மணிப்​பூர் மாநிலத்​தின் குகி இனத்தை சேர்ந்த லாம்​நந்​தி​யம் சிங்​சன் மற்​றும் மைதேயி இனத்தை சேர்ந்த கந்​தோய் சர்மா காங்​பிரெய்​லாக்​பம் ஆகிய இரு​வரும் அடங்​கு​வர். இவர்​களும் விமான விபத்​தில் உயி​ரிழந்​தனர். இந்த தகவலறிந்​ததும் இவர்​களது குடும்​பத்​தினர் அதிர்ச்சியடைந்​தனர். மேலும் அரசியல் கட்சியினர், சமூக அமைப்​பினர், மணிப்​பூர் மக்​கள் என அனைவரும் தங்​கள் இன வேறு​பாட்டை மறந்து அந்​த குடும்​பத்​தினருக்கு இரங்​கல் தெரி​வித்​தனர். தவிர சமூக வலை​தளங்​களில் அந்த 2 விமான பணிப்​பெண்​களின் ஆத்மா சாந்​தி​யடைய ஆழ்ந்த இரங்​கல்​கள் குவிந்​தன. இதுகுறித்து டெல்​லி​யில் உள்ள மைதேயி பாரம்​பரிய அமைப்பின் செய்​தி தொடர்​பாளர் கூறும்​போது, ‘மணிப்​பூர் மக்​கள் இதயம் நொடிந்து போயுள்​ளனர். இனத்தை பொருட்​படுத்​தாமல், அனை​வருமே பிரார்த்​தனை செய்​தனர். இரங்​கல் தெரி​வித்து வரு​கின்​றனர்.

கடந்த 2 ஆண்​டு​களாக மணிப்​பூரில் நடை​பெற்று வரும் குக்கி – மைதேயி இன கலவரம், இந்த 2 இளம்​பெண்​களின் இறப்​பால் மங்​கி​யுள்​ளது. அவர்​கள் வானத்​தின் தேவதைகள். அவர்களது மரணம், 2 இனங்​களை ஒன்​றிணைக்க உதவி​யுள்​ளது. இந்த மனித உயிர் எத்​தனை அரியது என்​பதை அவர்​களுக்கு உணர்த்தி உள்​ளது. வாழும் வரை அமை​தி​யாக ஒன்​றிணைந்து வாழ வேண்டும் என்​பதை அவர்​களு​டைய மரணங்​கள் உணர்த்தி உள்​ளது’’ என்​றார். இதற்​கிடை​யில், லாம்​நந்​தி​யம், கந்​தோய் ஆகியோரது குடும்​பத்​தினர் அகம​தா​பாத்துக்கு சென்று, உடல்​களை அடை​யாளம் காண, டிஎன்ஏ பரிசோதனைக்​காக தங்​கள் ரத்த மாதிரி​களை வழங்​கினர். உயி​ரிழந்த லாம்​நந்​தி​யம் சிங்​சன் குடும்​பத்​தில் அவர் மட்​டும்​தான் வரு​வாய் ஈட்​டு​பவ​ராக இருந்​துள்​ளார். இவரது குடும்​பத்​தினர் காங்​போக்பி என்ற பகு​தி​யில் வாடகை வீட்​டில் வசிக்​கின்​றனர்.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi