சென்னை: கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். பட்டாசு விபத்தில் மதிப்புமிக்க உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. பட்டாசு விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்று ஆளுநர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.