Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கொல்கத்தாவில் கடும் பனி மூட்டம் 11 விமானங்கள் தாமதம்

சென்னை: கொல்கத்தாவில் கடுமையான பனி மூட்டத்துடன் மோசமான வானிலை நிலவுவதால் சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் 6 விமானங்கள், சென்னை வரும் 5 விமானங்கள் என மொத்தம் 11 விமானங்கள் தாமதமானது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர். கொல்கத்தாவில் நேற்று காலையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு அதிகாலை 4.35, 8.25, 12.10, மாலை 3, 6.15, இரவு 9.20 ஆகிய நேரங்களில் புறப்பட வேண்டிய 6 விமானங்கள் 3 மணி நேரத்தில் இருந்து, ஒன்றரை மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

இதுபோல கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு காலை 11.10, பகல் 1.45, 1.50, மாலை 5.25, இரவு 8.35 நேரங்களில் வரவேண்டிய 5 விமானங்கள் 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை தாமதமாக வந்தன. கொல்கத்தாவில் மோசமான வானிலை நிலவுவது, பயணிகள் பாதுகாப்பு காரணமாக விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதுகுறித்து ஏற்கனவே பயணிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக விமான நிறுவனங்கள் தெரிவித்தன. ஆனாலும் பயணிகள் விமானங்கள் தாமதம் காரணமாக பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். குறிப்பாக டிரான்சிட் பயணிகள், தாங்கள் செல்ல வேண்டிய விமானத்தை தவற விட்டுவிட்டு அவதிக்குள்ளாகினர்.