Tuesday, July 15, 2025
Home செய்திகள் கொல்கத்தாவில் கொலையான மகனின் உடலை மீட்டு தர வேண்டும்

கொல்கத்தாவில் கொலையான மகனின் உடலை மீட்டு தர வேண்டும்

by Lakshmipathi

*கலெக்டர் ஆபீசில் கண்ணீர் மல்க பெற்றோர் மனு

திருப்பூர் : காங்கயம் படியூர் பகுதியை சேர்ந்த ரவிக்குமார். இவரது மனைவி செல்வி ஆகியோர் நேற்று கண்ணீர் மல்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: எனது மகன் ராகுல் (25) ஈச்சர் வண்டியில் சென்னையிலிருந்து லோடு ஏற்றிக்கொண்டு கொல்கத்தாவுக்கு சென்றார். அங்குள்ள லாரி பார்க்கிங்கில் எனது மகன் பேசிக்கொண்டிருந்த போது, சக டிரைவர் ஒருவரால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

எனது மகனுக்கு மனைவியும், 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. எனது மகனின் வருமானத்தை வைத்தே நாங்கள் குடும்பம் நடத்தி வந்தோம். ரவிக்குமாராகிய நான் மாற்றுத்திறனாளி என்பதால் என்னால் எந்த வேலையும் செய்ய இயலாது. எனவே எனது மகனை குத்தி கொலை செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகனின் உடலை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi