Saturday, September 23, 2023
Home » கொடுங்கையூர் பகுதியில் குப்பை குவியலை அகற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

கொடுங்கையூர் பகுதியில் குப்பை குவியலை அகற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

by Suresh

பெரம்பூர்: கொடுங்கையூர் பகுதியில் மழையில் நனைந்த குப்பையால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து வருவதால், இதனை உடனடியாக அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் தற்போது விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் ஆங்காங்கே குப்பை நனைந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனை அகற்ற மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். அந்த வகையில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூர் 35வது வார்டு ஈவெரா பெரியார் சாலை 50வது தெரு மற்றும் 2வது தெரு சந்திப்பில் காலி இடத்தில் குப்பை, மரக்கழிவுகள், கட்டிடக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.

அதன் மேலே அப்பகுதி மக்கள் மேலும் குப்பையை கொண்டு வந்து கொட்டுகின்றனர். அந்த குப்பையை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றாமல் அப்படியே விட்டு விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து வருவதாக, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து பலமுறை மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தும் குப்பையை அகற்ற அவர்கள் வருவதில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள குப்பை மற்றும் மரக்கழிவுகளை அகற்றி மீண்டும் அந்த இடத்தில் குப்பை கொட்டாதவாறு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?