ஊட்டி: கொடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்கில் 5 ஆண்டுகளாக ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் இவ்வழக்கு விசாரணை வந்தது. குற்றவாளிகள் வாளையார் மனோஜ், ஜம்சீர் அலி ஆகியோர் ஆஜராகினர். அரசு தரப்பில் வக்கீல் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் ஆஜராகினார். சிபிசிஐடி கூடுதல் எஸ்பி முருகவேல் தலைமையில் போலீசார் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் காதர் இவ்வழக்கின் விசாரணையை அக்டோபர் மாதம் 13ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து அரசு வக்கீல் ஷாஜகான் கூறுகையில்,“இதுவரை நடந்த விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி கேட்டுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து, தற்போது வரை நடந்த வழக்கு விசாரணை குறித்து நான்கு பக்க அறிக்கையை தாக்கல் செய்தோம். மேலும், சில எலக்ட்ரானிக் தகவல்கள் சேகரித்துக் கொண்டிருக்கிறோம் எனவும் தெரிவித்தோம். அதேபோல், புதிதாக சிலரிடம் விசாரணை மேற்கொள்ள சம்மன் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்தோம். எனவே, வழக்கு விசாரணை மேற்கொள்ள காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி அப்துல் காதர், வழக்கு விசாரணையை அக்டோபர் மாதம் 13ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்’’ என்றார்.