கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலிசார் தீவிரபடுத்தியுள்ளனர். கோடநாடு சம்பந்தபட்ட நபர்கள் அங்கு சென்று வந்த நபர்கள், அது குறித்து அறிந்தவர்கள் என அனைவரிடமும் இந்த விசாரணை தீவிரபடுத்தபட்டுள்ளது. அதன் அடிப்படையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் ஐயப்பனுக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். அதன் அடிப்படையில் ஒட்டுனர் ஐயப்பன் ஆஜராகியுள்ளார்.
ஐயப்பனை பொருத்தவரையில், 1991-ம் ஆண்டு முதல் ஜெயலலிதா இறந்த பிறகும் சசிகலா சிறையில் இருந்து திரும்பும் வரை அவர்களது கார்களை பராமரித்து ஒப்ப்டைக்கும் வரை பணியில் இருந்தார். இவர் பணியில் இருந்த காலகட்டத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளதால், இது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கு முன்னதாக ஐஜியாக இருந்த சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணையின் போது நீலகிரியில் கடந்த ஓராண்டுக்கு முன்பாக ஒருநாள் விசாரணைக்காக ஆஜராகியிந்தார். மீண்டும் தற்போது சிபிசிஐடி போலீசார் அழைப்பின் பேரில் அழைபானை தரபட்டு அவர் ஆஜராகியுள்ளார்.