Friday, April 19, 2024
Home » கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடியில் அமைக்கப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை ஜூன் 3ம் தேதி முதல்வர் தொடங்கி வைப்பார்: சட்டப்பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடியில் அமைக்கப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை ஜூன் 3ம் தேதி முதல்வர் தொடங்கி வைப்பார்: சட்டப்பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

by Karthik Yash

சென்னை: கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையம், ஜூன் மாதம் 3ம் தேதி கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதல்வரால் தொடங்கி வைக்கப்படும் என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு 49 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு:

  • தற்போது கட்டப்பட்டு வரும் குத்தம்பாக்கம் புதிய பேருந்து முனையம் சர்வதேச தரத்திற்கு ரூ.60 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்படும்.
  • திருவொற்றியூரில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் வடசென்னை மக்களுக்குப் பயன்படும் வகையில் சுமார் 5 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரை மேம்படுத்தப்படும்.
  • சாத்தாங்காடு இரும்பு மற்றும் எகு அங்காடி வளாகம் ரூ.33.35 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கப்படும்.
  • சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம், மாதவரம் சரக்குந்து முனையத்தில் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.30.30 கோடி நிதியை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கும்.
  • சென்னை வெளிவட்டச் சாலையை ஒட்டி, வரதராஜபுரத்தில் ஒப்பந்தப் பேருந்துகள் நிறுத்துமிடம் ரூ.29 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • கிழக்கு கடற்கரையில் நீலாங்கரை முதல் அக்கரை வரை முதற்கட்டமாக சுமார் 5 கி.மீ நீளத்திற்கு மிதி வண்டிப்பாதை மற்றும் நடைபாதை ரூ.20 கோடி மதப்பீட்டில் அமைக்கப்படும்.
  • கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து ஊரப்பாக்கம் ஏரி வரை, ரூ.17 கோடி மதிப்பீட்டில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கப்படும்.
  • கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் மருத்துவ சிகிச்சை மையத்துடன் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
  • கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தினுள், 6 ஏக்கரில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்படும்.
  • கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை ஒட்டியுள்ள அயனஞ்சேரி- மீனாட்சிபுரம் சாலையினை ரூ.7.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துதல்.
  • சென்னையில் நான்கு மேம்பாலங்களின் கீழ் உள்ள இடங்கள் ரூ.6 கோடி மதிப்பீட்டில் அழகு படுத்தப்படும்.
  • சிறுசேரியில் அமைந்துள்ள 50 ஏக்கர் வன நிலத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற வனம் ஏற்படுத்தப்படும்.
  • சென்னை வெளிவட்டச் சாலையில் 4 உடற்பயிற்சிப் பூங்காக்கள் ரூ.4 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படும்.
  • கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையம், ஜூன் மாதத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதல்வரால் தொடங்கி வைக்கப்படும்.
  • சென்னை பெருநகரப் பகுதியில் மனைப்பிரிவுகளுக்கான திட்ட அனுமதி, இணைய வழியாக வழங்கப்படும்.
  • சென்னை பெருநகரப் பகுதியில் உள்ள பாரம்பரிய கட்டடங்களைப் பாதுகாப்பதற்காக மாற்றத்தக்க வளர்ச்சி உரிமைச் சான்றிதழ் வழங்கப்படும்.
  • சென்னை சேத்துப்பட்டில் உள்ள சலவைக் கூடத்தினை ரூ.10 கோடி மதிப்பீட்டில் மறுவளர்ச்சி மேற்கொள்ளப்படும்.
  • ராயபுரம் மூலகொத்தளத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் அமைக்கப்படும்.
  • கோடம்பாக்கத்தில் உள்ள 1.5 கி.மீ நீளமுள்ள புலியூர் கால்வாய் கரைகள், ரூ.5 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்தப்படும்.
  • சென்னையில் கொண்டித்தோப்பு பகுதியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் மற்றும் ரத்த சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படும்.
  • சிந்தாதிரிப்பேட்டை மே தினப்பூங்காவை ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
  • அண்ணாசாலை- டேம்ஸ் சாலை – ஜெனரல் பேட்டர்ஸ் சாலை சந்திப்பில் நடை மேம்பாலம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • சென்னை மயிலாப்பூர் முண்டக்கண்ணி அம்மன் கோவில் அருகில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்.
  • சென்னை கோயம்பேட்டில் உள்ள சாலை சந்திப்பில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் இயற்கை வனப்புடன் பூங்கா அமைக்கப்படும்.
  • வடசென்னை காசிமேட்டில் உள்ள கடற்கரைப் பகுதி ரூ.6 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
  • தண்டையார் பேட்டை பேருந்து பணிமனை ரூ.25 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்படும் உட்பட 50 அறிவிப்புகளை சிஎம்டிஏ அமைச்சர் பி.கே.சேகர்பாபு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

3 − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi