Wednesday, November 29, 2023
Home » கிச்சன் டிப்ஸ்

கிச்சன் டிப்ஸ்

by Lavanya

* முட்டைக்கோஸை வதக்கும்போது சிறிது பால் சேர்த்து வதக்கினால், பொரியல் வெள்ளை வெளேர் என்றிருக்கும். சுவையும் கூடும்.
* பாலித்தீன் கவரில் பச்சைத் தக்காளிகளுடன் ஒரு பழுத்த தக்காளியையும் போட்டு வைத்தால் எல்லாப் பழங்களும் பழுத்துவிடும்.
* கையில் நல்லெண்ணெய் தடவிக்கொண்டு சேனைக் கிழங்கை நறுக்கினால் கையில் அரிப்பு ஏற்படாது.
* தேயிலை பாட்டிலில் சில ஏலக்காய்களைப் போட்டு வைத்தால் டீ குடிக்கும்போது மணமாக இருக்கும்.
* சப்பாத்தி, அடை போன்றவற்றை ஹாட் பேக்கில் வைக்கும்போது, ஸ்பூன் இரண்டைப் போட்டு அதன் மீது அடுக்கி வைத்தால் கடைசியில் உள்ளது ஆவியில் நனைந்து போகாமல், நசநசப்பு இல்லாமல் இருக்கும்.
* பெருங்காயம் கட்டிப் போல் ஆகாமல் இருக்க அது உள்ள டப்பாவில், காம்பு இல்லாத ஒரு பச்சை மிளகாய்ப் போட்டு விட்டால் பெருங்காயம் இளகி பஞ்சுபோல் மிருதுவாகிவிடும்.
* அப்பளத்தை உளுந்து டப்பாவில் போட்டு வைத்தால் அதிக நாட்கள் கெட்டுப் போகாது.
* பாலை உறை ஊற்றும்போது அதில் சிறிது அரிசிக் கஞ்சியை ஊற்றி வைத்தால் மிகக் கெட்டியான தயிர் கிடைக்கும்.
* எந்த மாவு அரைத்தாலும் வீட்டுக்கு வந்தவுடன், பரவலாகக் கொட்டி, சூடு ஆற வைத்த பிறகுதான் டப்பாவில் கொட்டி வைக்க வேண்டும். சூட்டோடு கொட்டி வைத்தால், ஆவியில் தண்ணீர்விட்டு, மாவு ஈரமாகி மாவு சீக்கிரம் கெட்டுப் போய்விடும்.
* சர்க்கரைப் பாத்திரத்தில் நான்கு கிராம்புகளைப் போட்டு வைத்தால் எறும்பு வராது.
* குண்டூசிகளைப் போட்டு வைக்கும் டப்பாவில் சிறிது சாக்பீஸ் தூளைப் போட்டு வைத்தால் குண்டூசி துருப்பிடிக்காது.– எம்.ஏ.நிவேதா.
* பீன்ஸ், பட்டாணி போன்றவைகளில் சிறிது சர்க்கரை சேர்த்து வேக வைத்தால் அதன் இயல்பான நிறம் மாறாமலிருக்கும்.
* உருளைக்கிழங்கை வேக வைக்கும்போது ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால் இரண்டாக உடையாது.
* புதிய எவர்சில்வர் பாத்திரமென்றால் சிறிது சூடாக்கினால் போதும். அதில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கரும் பசையும் நீங்கிவிடும்.
* கேக், பிஸ்கட் போன்றவற்றில் பதிக்கும் முந்திரி, செர்ரி பழம் விழாமலிருக்க பாலில் முக்கி அழுத்தவும்.
* தேங்காய்பால் திரிந்து போகாமல் இருக்க, அதில் சிறிது தண்ணீரில் மக்காச்சோள மாவைக் கலக்கி ஊற்றி கலந்தால் போதும்.
* ஆப்ப மாவு கலக்கும்போது, ஒரு தேக்கரண்டி கோதுமை மாவு சேர்த்தால் ஆப்பம் சீக்கிரம் காய்ந்து போகாது.
* ரவா இட்லி செய்யும்போது சிறிது சேமியாவை வறுத்து ரவையுடன் தயிரில் ஊற வைத்து செய்தால் ருசியாக இருக்கும்.– அண்ணா அன்பழகன்.
* ரவை, கோதுமை மாவு, அரிசிமாவு போன்றவற்றை கலந்து கரைத்த தோசை செய்யும்போது மிளகாய், கறிவேப்பிலை (விருப்பப்பட்டால் ஒரு நறுக்கிய வெங்காயம்) ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து, அதில் கடுகு தாளித்து, மாவு வகைகளை சேர்த்துக் கரைத்து, தோசை வார்த்தால் அருமையான சுவையுடன் இருக்கும்.
* சாம்பார் பொடியை அரைத்து வந்ததும் ஆறவிட்டு, டப்பாவில் அடைக்கும் முன்பு சிறிது விளக்கெண்ணெய் விட்டு, கரண்டியால் பிசறி டப்பாவில் அடைத்து வைத்தால், ஒரு வருடம் வரை கூட கெடாது. பூச்சி விழாது.
* சாம்பாரை சீரகம் தாளித்து இறக்கும் முன்பு சிறிதளவு புதினாவை பொடியாக நறுக்கிச் சேர்த்து இறக்கினால், சாம்பாரின் சுவை அதிகரிக்கும்.
* தினமும் இரவில் குக்கரின் கேஸ்கட், வெயிட் முதலியவற்றை நன்கு சுத்தம் செய்வதுடன், குக்கர் மூடியிலுள்ள சேஃப்டி வால்வையும் சரிபார்ப்பது நல்லது. இப்படி செய்து வைத்தால் காலை அவசரத்தில் பிரச்னைகள் வராமல் சமைக்கலாம்.
* கேஸ் அடுப்பு ஒரு பக்கம் எரிந்துகொண்டு இருக்கும்போதே, மற்ற பாகங்களைத் துடைத்து சுத்தம் செய்யக்கூடாது. ஸ்டவ் எரியாமல் இருக்கும்போது, கேஸ் சிலிண்டரையும் மூடிய பின்னரே சுத்தம் செய்ய வேண்டும்
– இரா. அமிர்தவர்ஷினி
* அப்பம் செய்யும் மாவில் சிறிதளவு உருக்கிய நெய் கலந்து செய்தால் நெய் வாசத்துடன் அப்பம் மணக்கும்.
* சீரகத்தை லேசாக வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு எந்தப் பொரியலிலும் இறுதியாகத் தூவி இறக்கினால், மணமும் சுவையும் கூடும்.
* இட்லி பூப்போல வர, 5 பங்கு அரிசிக்கு ஒரு பங்கு உளுந்து சேர்த்து ஊறவைத்து அரைத்து 8 மணி நேரம் புளிக்கவிடவும். இட்லி ஊற்றும்போது கரண்டியை பாத்திரத்தின் அடிவரை விட்டு கலக்காமல், மேலாக மாவை எடுத்து ஊற்றினால், இட்லி பூப்போல இருக்கும்.
* ரவாலட்டு செய்யும்போது அத்துடன் அவலையும் மிக்ஸியில் ரவை போல் பொடித்து நெய்யில் வறுத்துச் சேர்த்து 3 தேக்கரண்டி பால் பவுடரையும் கலந்து டேஸ்ட்டியான ரவா லட்டு பிடிக்கலாம்.
* கொத்துமல்லித் துவையல் அரைக்கும்போது புளிக்கு மாற்றாக மாங்காயைச் சேர்த்து அரைத்தால் சுவையும் மணமும் அசத்தும்.
* சாம்பாருக்கு பருப்பு வேகவைக்கும்போது ஒரு தேக்கரண்டி கொள்ளு சேர்த்து வேக வைத்தால் உடலில் கொழுப்பு சேராமல் இருக்கும்.
* காலிஃப்ளவரை சமைக்கும்போது தண்ணீரில் ஒரு தேக்கரண்டி பால் பவுடரைச் சேர்த்தால் காலிஃப்ளவர் வெண்மையாக இருக்கும்.
* இட்லிக்கு அரைக்கும் மாவில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து இட்லி ஊற்றி வைத்தால், இட்லி பூப்போல வரும்.
* கடைசியில் இருக்கும் இட்லி மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து ஆப்பச்சட்டியில் ஆப்பங்களாக ஊற்றினால், வித்தியாச சுவையில் மாலை நேர டிபன் தயார்.

– எம். நிர்மலா.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?