Monday, April 21, 2025
Home » கிச்சன் டிப்ஸ்

கிச்சன் டிப்ஸ்

by Lavanya

நன்றி குங்குமம் தோழி

*மோர்க்களி செய்து பின்னர் கடைசியாக அதன் மீது ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு கிளறி எடுத்தால் அபார சுவை கிடைக்கும்.

*அரிசி உப்புமாவில் பச்சை மிளகாய் சேர்ப்பதற்கு பதிலாக காய்ந்த மிளகாய் தாளித்து செய்தால் சுவை நன்றாக இருக்கும்.

*உளுத்தம் பருப்பு, சிறிது புளி, வரமிளகாயுடன் செளசௌ, அல்லது பீர்க்கங்காய் தோலை வீணாக்காமல் கடாயில் எண்ணெய் விட்டு வதக்கி தேவையான உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் போட்டு துவையல் அரைக்கலாம். சுவையாக இருக்கும்.

*அரிசி உப்புமாவில் காரச்சுவை அதிகம் உள்ளது போல் உணர்ந்தால் அது உப்பு குறைவால் கூட இருக்கும். அப்போது சிறிது சிட்டிகை உப்பை அதன் மீது தூவி கிளறி எடுத்தால் காரம் சமனமாகிவிடும்.- என்.பர்வதவர்த்தினி, சென்னை.

*அவியல் செய்யும் போது அரைத்த தேங்காய் விழுதை தயிரில் கலக்காமல், வேகவைத்த காய்கறிகளுடன் சேர்த்து பிறகு தயிர் கலந்தால் அவியல் நீர்த்துப் போகாமலிருக்கும்.

*ரவா லாடு, மாலாடு செய்யும் போது அரைத்த சர்க்கரையையும், நெய்யையும் ஒரு தட்டில் நன்றாக குழைத்து கலந்தபின் மாவை அதில் கலந்து உருண்டை பிடித்தால் சுவை கூடுதலாகும்.

*மிக்சருக்கு அவல் பொரிக்கும் போது சிதறாமல் தவிர்க்க வடிகட்டியில் அவலைப் போட்டு கொதிக்கும் எண்ணெயில் முக்கி பொரிக்கலாம்.- மல்லிகா அன்பழகன், சென்னை.

*சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொண்டு, தேங்காய், வரமிளகாய், இஞ்சி, பூண்டு, பட்டை, லவங்கம் அரைத்து, வெங்காயத்தையும் அரைத்து விழுதையும் நன்றாக வதக்கிய பின் 1 பங்கு அரிசி, 2 பங்கு நீர்விட்டு வேகவிட்டு, உப்பு சேர்த்து கலக்கினால், ஆனியன் ரைஸ் ரெடி.

*மணத்தக்காளி கீரையை வதக்கி, பருப்போடு மிளகாய், உப்பு, புளி சேர்த்து துவையலாக அரைத்தால் சுவையான சட்னி ரெடி.

*ரவா தோசை செய்யும் போது 2 ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென இருக்கும்.- எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.

*மோர்க்குழம்பு சுவை தூக்கலாக இருக்க கடுகு, வெந்தயம், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, உப்பு, சிவப்பு மிளகாய் மற்றும் மாங்காய் வற்றலை தயாரித்து சேர்க்க குழம்பு சுைவயோ சுவை.

*இட்லியில் உளுந்துக்கு பதில் சோயா மொச்சையை பயன்படுத்தி இட்லி தயாரித்தால் உடலுக்கு அதிகமாக சத்து கிடைக்கிறது.

*மாங்காய் அதிக புளிப்பாக இருந்தால் நறுக்கி, துண்டுகளாக்கி, சுண்ணாம்பு தண்ணீரை விட்டுக் கழுவ புளிப்பு குறைந்து விடும்.

*கீரைக் கூட்டு, பருப்புக் கூட்டு செய்யும் போது சிறிது வறுத்த சீரகத்தைப் போட்டு கரைத்து செய்தால் வாசனையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பர்.- கே.எல்.சுபாக்கனி, கன்னியாகுமரி.

*சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் செய்வதற்கு குருணை அரிசியை உபயோகிக்க பொங்கல் நன்கு குழைந்திருக்கும். சர்க்கரை பொங்கலுக்கு வெல்லம் பாதி, அஸ்கா பாதி ேசர்த்து செய்தால் சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும்.

*பச்சை மஞ்சள் நிறைய இருந்தால் அதை சுத்தம் செய்து, காயவைத்து ஊறுகாய் போடலாம்.

*மோர் மிளகாய் போடுவதற்கு வெந்தயத்தையும், உப்பையும் அரைத்து மோரில் கலந்து, பச்சைமிளகாயை குறுக்காக நறுக்கிப் போட்டு ஊறவைக்கவும்.

*வெண்பொங்கல் மீந்து போய் விட்டால் அதனுடன் வெங்காயம் சேர்த்து எண்ணெயில் உருட்டிப்போட்டு மாலை நேர ஸ்நாக்ஸ் செய்யலாம்.- அனுஜெய், ேகாவை.

*மீதமான சாதத்தை மிக்ஸியில் மாவு பதத்தில் அரைத்து அதில் சிறிது கடலை மாவை சேர்த்து தோசை ஊற்றினால் சுவையான தோசை.

*கோதுமை மாவை வாணலியில் வறுத்து ஆறியதும் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து இட்லி பாத்திரத்தில் வேக வைத்து எடுத்தால் ருசியான கோதுமை இடியாப்பம் ரெடி.- ஹேமலதா, தஞ்சை.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi