திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் கண்ணூரில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.ரயிலின் ஒரு பெட்டிக்கு தீ வைக்கப்பட்ட நிலையில் மற்ற பெட்டிகள் உடனடியாக கழட்டிவிடப்பட்டன.ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.