கரூர்: கரூரில் தமிழரசன் என்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். மலையாளம் என்பவரை கொல்ல முயன்ற வழக்கில் தமிழரசன் தலைமறைவாக இருந்தார். கரூர் அரிக்காரம்பாளையம் சாலையில் மேம்பாலம் அருகே பதுங்கியிருந்த தமிழரசனை போலீசார் சுட்டுப்பிடித்தனர். காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் காயமடைந்த தமிழரசன் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
+
Advertisement
