கரூர்: கரூரில் 10ம் வகுப்பு படிக்கும் பட்டியலின மாணவரைத் தாக்கிய புகாரில் வேறு பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டார். பள்ளி முடித்து பேருந்தில் செல்லும்போது ஏற்பட்ட பிரச்சினையை மனதில் வைத்து, அடுத்த நாள் அந்த மாணவர் வந்த பேருந்தில் ஏறி 10 மாணவர்கள் தாக்கியுள்ளனர். மேலும் அந்த மாணவரின் வீட்டுக்குச் சென்று, அவரது பாட்டியையும் தாக்கியுள்ளனர். இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.