சென்னை: கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் இன்று சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்ட அறிக்கை: கார்த்திகை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று (டிச.13ம் தேதி) அதிகளவில் பந்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. எனவே கார்த்திகை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100 க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 300 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும், 12 தட்கல் முன்பதிவு வில்லைகள் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
கார்த்திகை கடைசி வெள்ளி சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்: பதிவுத்துறை தகவல்
0