காரைக்குடி: காரைக்குடி தேவகோட்டை ரஸ்தா தேனாற்று பாலம் அருகே திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசு பேருந்தும் ஈரோட்டில் இருந்து காரைக்குடி நோக்கி பால் ஏற்றி கொண்டு வந்த பால் வாகனமும் இன்று அதிகாலை 1 மணிக்கு மேல் நேருக்குநேர் மோதி விபத்துக்குளானது. இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement


