Saturday, December 2, 2023
Home » எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 22 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..!!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 22 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..!!

by Lavanya

காரைக்கால் : எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகுகளில் சென்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்து வருவது வழக்கம். இதனிடையே அவ்வாறு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து வருகின்றனர்.

இதேபோல் இலங்கை கடற்கொள்ளையர்களும் மீனவர்களை தாக்கி அவர்களது மீன்கள் மற்றும் வலைகளை பறித்து சென்று அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று பருத்தித் துறை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 2 படகுடன் 22 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரையும், யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?