பெங்களூரு: கன்னட தொலைக்காட்சி நடிகர் சம்பத் ஜெ.ராம் (35) என்பவர், கர்நாடக மாநிலம் நெலமங்களாவில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் நேற்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தொலைகாட்சி ெதாடரில் நடிப்பதற்கான வாய்ப்பு கடந்த சில மாதங்களாக கிடைக்காததால், தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்த சம்பத் ஜெ.ராம், திடீரென தற்கொலை செய்து கொண்டதாக நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.