சென்னை: கல்வராயன் மலை அரசுப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வராயன் மலைப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில், வெள்ளிமலை-சின்ன திருப்பதி சாலை அமைக்க அரசு அனுமதி அளித்தபின் பணி முடிக்கப்படும் என ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபர்கள் சாலை அமைக்கும் அனுமதியை பெற்று குறிப்பிட்ட கெடுவுக்குள் பணியை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
Advertisement


