Wednesday, November 29, 2023
Home » தனி ஆளாகக் கட்சியை கட்டுக்கோப்பாக வழி நடத்தியவர் கலைஞர்.. நினைவுகளை பகிர்ந்தார் நடிகர் ரஜினிகாந்த்!!

தனி ஆளாகக் கட்சியை கட்டுக்கோப்பாக வழி நடத்தியவர் கலைஞர்.. நினைவுகளை பகிர்ந்தார் நடிகர் ரஜினிகாந்த்!!

by Porselvi

சென்னை : கலைஞர் நூற்றாண்டை ஒட்டி முரசொலி நாளிதழுக்கு ‘தமிழ்த்திரை உலகத்தின் பார்வையில் கலைஞர்’ என்ற தலைப்பில் கலைஞர் உடனான தனது நினைவுகளை நடிகர் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார் .அதில், நான் மிகவும் மதிக்கும் அமரர் டாக்டர் கலைஞர் அவர்க ளின் நூற்றாண்டு விழா தருணத்தில் நான் அவரைப் பற்றி ஒரு கட் டுரை எழுத முரசொலி பத்திரிகை அலுவ லகத்திலிருந்து திரு.செல்வம் அவர்கள் என்னைக் கேட்டுக்கொண்டார். கலைஞரின் வாழ்க்கை ஒரு திறந்த புத் தகம். திரு. எஸ்.பி. முத்துராமன் அவர்கள் கலைஞரைப் பற்றி நிறைய விஷயங் களை எனக்கு சொல்லியிருக்கிறார். திரு. எஸ்.பி.முத்துராமன் அவர்களின் தந்தை சொல்ல சொல்ல அவர் மீது இருந்த மதிப்பும், மரி யாதையும் அதிகமானது.

அவர் தமிழ் திரை உலகின் இரண்டு ஜாம்பவான்க ளான திரு. சிவாஜி கணேசன் அவர்களும் மற்றும் திரு.எம்.ஜி.ஆர் களும் புகழின் உச்சிக்குச் செல்ல முக்கியமான கார ணமாக இருந்தவர் கலை ஞர் அவர்கள். கலைஞர் அவர்கள் எழுதிய “பராசக்தி” படத்தின் அற்புதமான, சமு தாய சீர்திருத்தும், புரட்சி கரமான வசனங்களை உணர்ச்சிகரமாக பேசி. நடித்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர் கள் ஒரே நாளில் உச்ச நட் சத்திரம் ஆனார். மதிப்பிற் குரிய திரு.எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மருத நாட்டு இளவரசி”. “மந்திரி குமாரி”, “மலைக்கள்ளன்” போன்ற படங்களுக்கு வச னம் எழுதி அந்தப் படங் களை மிகப்பெரிய வெற்றிப்படங்களாக்கினார்.

நான் 1980-ல் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தேன். அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் அவர் எழுத சம்மதித்த பிறகும் நீங்கள் ளர் கலைஞர் அவர்களின் வேண்டாம் என்று கூறியதை அவரிடம் நண்பர் மற்றும் அவருக்கு நான் எப்படி சொல்வது என்று திண்டாடி மிகவும் நெருக்கமானவர். னார். நான் அவரை சந்திக்க ஒரு வாய்ப்பு அந்தத் திரைப்படத்தின் வச ஏற்படுத்திக்கொடுங்கள். நானே அவரிடம் னங்கள் தயாரிப்பாளருக்கு சொல்கிறேன் என்று கூறினேன். அவரும் திருப்தி தரவில்லை. படம் வேண்டா வெறுப்பாக சரி என்று சொல்லி ஆரம்பிப்பதற்கு சில நாட்ளுக்கு முன்னால் கலைஞர் அவர்களை சந்திக்க ஒரு வாய்ப்பு தயாரிப்பாளர் ஏற்படுத்திக் கொடுத்தார். என்று தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் .

அத்துடன் எளிமையான தமிழ் வசனத்தை பேசி நடிக்க சிரமப்படுவதால் தங்களது வசனத்தை பேசி தன்னால் நடிக்க இயலாது என நடிகர் ரஜினிகாந்த் கூற, அதற்கு கலைஞர் கருணாநிதியோ எனக்கு யாருக்கு எப்படி கதை,வசனம் எழுத வேண்டும் என தெரியும். சிவாஜிக்கு எழுதுவது போல எம்.ஜி.ஆருக்கு எழுத மாட்டேன்; எம்.ஜி.ஆருக்கு எழுதுவது போல சிவாஜிக்கு எழுத மாட்டேன். உங்களது 2 படங்களை பார்த்துள்ளதால் உங்களது ஸ்டைலில் எழுதுகிறேன் என சர்வ சாதாரணமாக கலைஞர் என்னிடம் கூறினார் கலைஞர் எழுதிய வசனத்தில் நடித்திருக்கலாமோ? தவறு செய்து விட்டோமோ என்ற ஒரு குற்ற உணர்ச்சி எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. கலைஞர் இதயத்தில் எனக்கு என்று ஒரு தனி இடம் இருந்தது, எந்த ஒரு விழாவிலும் என்னை அவர் அருகில் அமர வைத்து மகிழ்வார் என்று நினைக்கும் பொழுது எனக்கு பெருமையாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?