புதுடெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், கடந்த 2022ம் ஆண்டு பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர் நீதிபதி டி.ராஜா. அவருக்கு எதிராக ஊழல் அல்லது முறைகேடான நடத்தை குறித்த புகார்கள் பெற்றுள்ளதா? என்பது குறித்து பதில் வழங்க உத்தரவிடக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவானது டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, மனு மீது பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றத்தின் பொது தகவல் அதிகாரிக்கு நீதிபதி சச்சின் தத்தா உத்தரவிட்டார்.