புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டு வழக்கில் சாதகமான தீர்ப்புவர சட்டப் போராட்டம் நடத்தியதற்கு முதல்வருக்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளது. புதுக்கோட்டையில் ஜூன் 18ல் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெறும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெறும் விழாவில் அமைச்சர் உதயநிதி கலந்து கொள்வார் என்றும் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.